Thursday, October 20, 2011

காளான்,குடைமிளகாய் குர்மா


தேவையானவை:
காளான்
குடமிளகாய்
வெங்காயம்-1 
தக்காளி-2 
மிளகாய் பொடி-2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி-1 ஸ்பூன்
தேங்காய் பால் -1 கப் 
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்

தாளிக்க:
சீரகம்
கருவேப்பில்லை 
எண்ணை

செய்முறை:
*கடாயில் எண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து,வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின்பு அதில் தக்காளி சேர்த்து வதக்கி, காளான் ,குடமிளகாய்,மிளகாய் பொடி,கரம் மசாலா பொடி,உப்பு சேர்த்து நன்கு எண்ணை பிரியும் வரை வதக்கவும்.
*பின்பு அதில் தேங்காய் பால் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.

சப்பாத்தி ,புலாவ் வுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment