Friday, October 21, 2011

பாதுஷா

தேவையானவை:
மைதா-2 கப்
வெண்ணை-1/2 கப்
தயிர்-2 ஸ்பூன்
பேகிங் சோடா -1/4 ஸ்பூன்
சர்க்கரை-1 ஸ்பூன் 
தண்ணீர்-மாவு பிசைவதற்கு
எண்ணை-பொரித்தெடுக்க 
சர்க்கரை பாகு:
சர்க்கரை-1/2 கப்
தண்ணீர் சிறிதளவு
எலுமிச்சை சாறு -1 ஸ்பூன்
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில்  மைதா,வெண்ணை,தயிர்,பேகிங் சோடா ,சர்க்கரையை சேர்த்து பிசைந்து ,அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
*மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து நடுவில் லேசாக அழுத்தி அதன் ஓரகளை படத்தில் காட்டி உள்ளது போல் மடித்து விடவும்.

*கடாயில் எண்ணை ஊற்றி பாதுஷகலை பொரித்து எடுத்து கொள்ளவும் .
*வேறொரு கடாயில் சர்க்கரை சிறிது தண்ணீர் கலந்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி,அதில் எலுமிச்சை சாரு பிழிந்து  வைக்கவும்.
*பொரித்தெடுத்த பாதுஷாகளை சர்க்கரை பாகில்  போட்டு  எடுத்து தனியே வைக்கவும் .
*பாதுஷாக்கள் அறியதும் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.
 

Thursday, October 20, 2011

காளான்,குடைமிளகாய் குர்மா


தேவையானவை:
காளான்
குடமிளகாய்
வெங்காயம்-1 
தக்காளி-2 
மிளகாய் பொடி-2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி-1 ஸ்பூன்
தேங்காய் பால் -1 கப் 
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்

தாளிக்க:
சீரகம்
கருவேப்பில்லை 
எண்ணை

செய்முறை:
*கடாயில் எண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து,வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின்பு அதில் தக்காளி சேர்த்து வதக்கி, காளான் ,குடமிளகாய்,மிளகாய் பொடி,கரம் மசாலா பொடி,உப்பு சேர்த்து நன்கு எண்ணை பிரியும் வரை வதக்கவும்.
*பின்பு அதில் தேங்காய் பால் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.

சப்பாத்தி ,புலாவ் வுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Saturday, October 15, 2011

ரவா லட்டு

தேவையானவை:
ரவா-1 கப்
சர்க்கரை-1 கப்
நெய் -1/4 கப்
முந்திரி பருப்பு -10

செய்முறை:
*கடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்தியை வறுத்து எடுத்து வைக்கவும் .
*அதே கடாயில் ரவா வை வாசனை வரும் வரை வறுத்து,ஆர வைத்து மிக்ஸ்யில் நன்கு பொடித்து வைத்து கொள்ளவும் .
*சர்க்கரையை தனியாக பொடித்து வைக்கவும் .
*ஒரு அகலமான பாத்திரத்தில் வருத்த முந்திரி,பொடித்த ரவா ,சர்க்கரை,மிதமாக சுடுபடுதிய நெய் ஆகியவற்றை சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.


Thursday, October 13, 2011

பேக்ட் காலிப்ளவர்


தேவையானவை:
காலிப்ளவர் பூக்கள் -2 கப்
தக்காளி விழுது-1/2 கப்
அரிசி மாவு-2 ஸ்பூன்
மிளகாய் தூள் -2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன்
எண்ணை- சிறிதளவு

செய்முறை:
*காலிப்ளவர்ல் மிளகாய் தூள்,உப்பு,அரிசி மாவு கலந்து வைக்கவும்.
*கடாயில் எண்ணை ஊற்றி தக்காளி,இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கி,அதில் கலந்து வைத்துள்ள காலிப்ளவர் பூக்களை சேர்த்து நன்கு பிரட்டவும்.
*பின்பு 350F ப்ரீஹீட் செய்யபட்ட ஓவன் -ல் 30 நிமிடகள் வைத்து பேக் செய்யவும் .

கிரிஸ்பி பேக்ட் காலிப்ளவர் ரெடி !!