வடைகறி 
தேவையான பொருட்கள் :
வடை செய்வதற்கு :  
கடலைப்பருப்பு - ஒரு கப்
சிகப்புமிளகாய்-4 
பெருகாயம் -சிறிதளவு  
உப்பு -சிறிதளவு
எண்ணை-பொரித்தெடுக்க தேவையானது 
கறி செய்வதற்கு  
பெரிய வெங்காயம் - 2 
தக்காளி - 1
பூண்டு,இஞ்சி விழுது -சிறிதளவு  
சாம்பார் பொடி -2 ஸ்பூன் 
கரம் மசாலா பொடி -சிறிதளவு 
அரைக்க :  
 பச்சைமிளகாய் - 4 
 தேங்காய் துருவல்  - 1 கப் 
  இஞ்சி -  சிறிதளவு
 தாளிக்க  :
பட்டை,இலை,
கறிவேப்பிலை
செய்முறை :
*கடலைப்பருப்பை  ஒரு  மணி நேரம் ஊற வைத்து அதனுடன் சிகப்புமிளகாய் ,பெருகாயம் ,உப்பு சேர்த்து  அரைத்து  அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறு வடைகளாக பொரித்தெடுத்து  கொள்ளவும்.
*வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை  தாளித்து , அரிந்த வெங்காயம், தக்காளி,பூண்டு,இஞ்சி விழுது சேர்த்து வதக்கி  சாம்பார் பொடி, கரம் மசாலா பொடி  ஆகியவற்றை  சேர்த்து எண்ணெய் பிரியும் வரை  வதக்க  வேண்டும்.
*பிறகு அரைத்த தேங்காய், இஞ்சி, பச்சைமிளகாய்  கலவையை ஊற்றி ,   தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி  நன்கு கொதிக்க விடவும் .
*குழம்பு  நன்கு கொதித்தவுடன் வடைகளை சிறு துண்டுகளாகி குழம்பில் போட்டு இறக்கி விடவும்  .
குறிப்பு :
சாப்பிடுவதற்கு 2 மணி நேரம் முன்பே வடைகரியை செய்து  வைத்துவிட வேண்டும் ,அப்போதான் வடை குழம்பில் ஊறி நல்லா இருக்கும் . 
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வட போச்சே....
Super blog. nice recipes; Keep it up. :)
Deepa thanks....
Post a Comment