Monday, April 26, 2010

வடைகறி

வடைகறி
தேவையான பொருட்கள் :
வடை செய்வதற்கு :
கடலைப்பருப்பு - ஒரு கப்
சிகப்புமிளகாய்-4
பெருகாயம் -சிறிதளவு
உப்பு -சிறிதளவு
எண்ணை-பொரித்தெடுக்க தேவையானது


கறி செய்வதற்கு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு,இஞ்சி விழுது -சிறிதளவு
சாம்பார் பொடி -2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி -சிறிதளவு

அரைக்க :
 பச்சைமிளகாய் - 4
 தேங்காய் துருவல்  - 1 கப்
  இஞ்சி - சிறிதளவு

 தாளிக்க :
பட்டை,இலை,
கறிவேப்பிலை



செய்முறை :
*கடலைப்பருப்பை  ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் சிகப்புமிளகாய் ,பெருகாயம் ,உப்பு சேர்த்து  அரைத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறு வடைகளாக பொரித்தெடுத்து கொள்ளவும்.

*வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து , அரிந்த வெங்காயம், தக்காளி,பூண்டு,இஞ்சி விழுது சேர்த்து வதக்கி சாம்பார் பொடி, கரம் மசாலா பொடி  ஆகியவற்றை  சேர்த்து எண்ணெய் பிரியும் வரை  வதக்க வேண்டும்.

*பிறகு அரைத்த தேங்காய், இஞ்சி, பச்சைமிளகாய்  கலவையை ஊற்றி ,  தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி  நன்கு கொதிக்க விடவும் .

*குழம்பு நன்கு கொதித்தவுடன் வடைகளை சிறு துண்டுகளாகி குழம்பில் போட்டு இறக்கி விடவும் .



குறிப்பு :
சாப்பிடுவதற்கு 2 மணி நேரம் முன்பே வடைகரியை செய்து வைத்துவிட வேண்டும் ,அப்போதான் வடை குழம்பில் ஊறி நல்லா இருக்கும் . 

4 comments:

Alexander said...
This comment has been removed by the author.
Alexander said...

வட போச்சே....

Deepa said...

Super blog. nice recipes; Keep it up. :)

priya said...

Deepa thanks....

Post a Comment