Tuesday, November 22, 2011

பன்னீர் பிரியாணி


பன்னீர் பிரியாணி
தேவையானவை:
அரிசி-1 கப்
பன்னீர் துண்டுகள்-1 கப்
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
வெங்காயம்-1
தக்காளி-2
தேங்காய் பால்-1/2 கப்
மிளகாய் பொடி-2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி-1 ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி தழை-1 கப்
தாளிக்க:
பட்டை
சீரகம்


செய்முறை:
*கடாயில் நெய் ஊற்றி பட்டை,சீரகம் தாளித்து வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதில் தக்காளி,மிளகாய் பொடி,கரம் மசாலா பொடி,பன்னீர் துண்டுகளை சேர்த்து எண்ணை பிரியும் வரை வதக்கவும்.

*பின்பு அதில்,தேங்காய் பால்,புதினா,கொத்தமல்லிதழை சேர்த்து மசாலா நன்கு வதகியதும் தனியே வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அரிசி சேர்த்து வேகவிடவும் ,அரிசி முக்கால் பாகம் வெந்ததும், தனியே வடித்து வைக்கவும்.

*ஒரு ஓவன் ட்ரேயில் முக்கால் பாகம் வெந்த சாதம்,மசாலாவை சேர்த்து வைக்கவும்.

*350 டிகிரி ப்ரிஹீட் செய்த ஓவனில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

*பன்னீர் பிரியாணி ரெடி!!!   

No comments:

Post a Comment