Thursday, June 3, 2010

பன்னீர் மசாலா


பன்னீர் மசாலா
தேவையானவை 
பன்னீர் செய்வதற்கு :
பால் -6 கப்
எலுமிச்சை சாறு -4 ஸ்பூன் 
மசாலா செய்வதற்கு:
வெங்காயம் -2
தக்காளி -2
பச்சைமிளகாய் -2
பால்-1 கப்
  வெண்ணெய்-1  ஸ்பூன் 
 
 மிளகாய் பொடி -1 ஸ்பூன்
மல்லி பொடி -1 ஸ்பூன்
கரம் மசாலா பொடி -1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
தாளிக்க :
பட்டை ,கருவேப்பில்லை


செய்முறை :
*6 கப் பாலை 15 நிமிடம் காய்ச்சவும் ,பால் சிறிது சுண்டியதும் அதில் எலுமிச்சை சாருடன் சிறிது தண்ணீர் கலந்து ஊற்றினால் பால் திரிந்துவிடும் ,பின்பு திரிந்த பாலிலிருந்து தண்ணீரை வடித்துவிட்டு பாலாடையை  ஒரு துணியில் போட்டு சுற்றி அதன்மேல் ஒரு கனமான பாத்திரத்தை வைக்கவும் ,1 மணி நேரத்தில் பாலாடை இறுகிவிடும் ,இப்பொது பாலாடை கட்டியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும் ,இப்பொது பன்னீர் தயார் .

* வெங்காயம் ,தக்காளியை  வதக்கி  ஆறவிட்டு நன்கு அரைத்து எடுக்கவும்  .

*   ஒரு கடாயில் 1 ஸ்பூன் வெண்ணை போட்டு அதில் பட்டை கருவேப்பில்லை தாளித்து பின்பு வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது ,உப்பு போட்டு வதக்கி அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம் ,தக்காளி விழுதை கொட்டி 10 நிமிடம் கொதிக்கவிடவும் .

*பின்பு 1 கப் பாலில் மிளகாய் பொடி ,மல்லி பொடி ,கரம் மசாலா பொடி போட்டு கலந்து கொதிக்கும் மசாலாவில் கலந்து 2 நிமிடம் கொதிக்க விடவும் .

*பின்பு பன்னீர் துண்டுகளை சேர்த்து இறகிவிடவும் .
 
 குறிப்பு :
பன்னீர் துண்டுகளை மசாலாவில் சேர்பதற்கு முன்பு எண்ணெயில் பொரித்தும் சேர்க்கலாம் .
 

1 comment:

Lakshmikasi said...

superb........thx for easy & simple Panner preparation ....

Post a Comment